பூக்களில் உறங்கும் மௌனங்கள்

1 comments - Post a comment


சில நாட்களாய்
அசாத்யமானதிற்கு ஆசைபடுவதே
வழக்கமாகிவிட்டது
அது அசாத்யமானதா என்பதும் தெரியவில்லை.

குழந்தை என்பதான ஓவியம்தான் சாத்தியமாகிறது
எப்படி கொண்டுவர
குழந்தை என்பதான ஓவியமன்றி
ஒரு குழந்தையை ஓவியத்தில்

தனிமையில் தகிக்கும் வெறுமையின் தெறிப்பை
எப்படி உணர்த்த
என் வார்த்தைகளில் உனக்கு

மரணத்தை மரணமின்றி
எப்படி உணர

பூக்களில் உறங்கும் மௌனத்தை
பெயர்க்க வேண்டும்
பூக்களின் மொழியில்

This Post has 1 Comment Add your own!
Preeti Shenoy - January 4, 2008 at 10:40 AM

Karthi, Happy new yer--have no idea what you said here--but the blog looks beautiful.

Post a Comment