நண்பனின் மரணம் தந்த அதிர்ச்சி
சில மணி துளிகள்தான்
சற்று நேரத்திலேயே
சாதாரணமாய் பேச முடிந்தது.
ஏன் சிரிக்கவும் முடிந்தது

மரமா நீ?
மனிதன்தானா ?
மனசாட்சியே இல்லை உனக்கு
என்கிறான்
இன்னொரு நண்பன்.

உதிரும் இலையைப் பார்க்கும்
இன்னொரு இலைக்கு
இருக்குமா மனசாட்சி
என்றபடியே பின்தொடர்ந்தேன்
எல்லோரையும்
ஒரு இலையாய்.