சில நாட்களாய்
அசாத்யமானதிற்கு ஆசைபடுவதே
வழக்கமாகிவிட்டது
அது அசாத்யமானதா என்பதும் தெரியவில்லை.
குழந்தை என்பதான ஓவியம்தான் சாத்தியமாகிறது
எப்படி கொண்டுவர
குழந்தை என்பதான ஓவியமன்றி
ஒரு குழந்தையை ஓவியத்தில்
தனிமையில் தகிக்கும் வெறுமையின் தெறிப்பை
எப்படி உணர்த்த
என் வார்த்தைகளில் உனக்கு
மரணத்தை மரணமின்றி
எப்படி உணர
பூக்களில் உறங்கும் மௌனத்தை
பெயர்க்க வேண்டும்
பூக்களின் மொழியில்
Subscribe to:
Posts (Atom)